செங்கோட்டை- நெல்லை இடையே மின்சார ரெயில் இயக்கம்
1 min read
Electric train operation between Sengottai-Nellai
19.10.2023
செங்கோட்டை- நெல்லை இடையே இன்று முதல் மின்சார ரெயில் இயக்கப்பட்டது.
மின்சார ரெயில்
செங்கோட்டை- நெல்லை இடையே மின்சார ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்ததை தொடர்ந்து செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை 6.45 மணிக்கு மின்சார ெரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த ெரயில் தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. முன்னதாக ெரயில் என்ஜின் டிரைவர்கள் சிவகுமார், விஷ்ணு பிராஜ் ஆகியோருக்கு செங்கோட்டை ெரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் செயலாளர் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி ராமன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். மேலும் ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர் .சாதிர் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா,
தென்காசி நகர மன்ற துணைத் தலைவர் கேஎன்எல் சுப்பையா, தென்காசி நகர மதிமுக செயலாளர் கார்த்திக், ரயில் பணிகள் நல சங்கத் துணைச் செயலாளர் ஆனந்தபவன் காதர் மைதீன், தென்காசி நகர திமுக நிர்வாகிகள் அ.சேக்பரித், மைதீன், சன் ராஜா, மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- நிருபர் முத்துசாமி, தென்காசி