June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

முறைகேடு புகார்: புளியரை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

1 min read

Malpractice complaint: Anti-bribery police raid Puliyara check post

19.10.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

முறைகேடு புகார்

தினமும் செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனை சாவடி வழியாக சென்று வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை முதல் இந்த சோதனை சாவடியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாலை தொடங்கிய இந்த சோதனை காலை 11 மணியை தாண்டி நடைபெற்று வருகிறது.

சோதனை முடிவிலேயே முறைகேடாக பணம் பெறப்பட்டதா என்பது தெரியவரும். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.