ராணிப்பேட்டை மாவட்ட செய்திகள்
1 min read
Ranipet District News 19.10.2023
வாலாஜா வட்டாரத்தில் ரூ.50க்கு பலா, கொய்யா, எலுமிச்சை
நெல்லிமற்றும் சீத்தா உள்ளிட்ட பழமரகன்றுகள்
19.10.2023

தோட்டக்கலை துறை சார்பில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 செலுத்தி பலா, கொய்யா, எலுமிச்சை
நெல்லிமற்றும் சீத்தா உள்ளிட்ட பழமரகன்றுகள் வழங்கப்பட்டன.
பழமரக்கன்றுகள்
கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுதோறும்
ஐந்து வகை பழமர கன்றுகள் விநியோகம் செய்திடும் பணிகள் தற்போது வாலாஜா வட்டாரத்தில் குடிமல்லூர் பஞ்சாயத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சலை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் மூ.பசுபதிராஜ் அவர்கள் முன்னிலையில்
தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பழகன்றுகளை விநியோகம் செய்து பழகன்றுகளை நன்றாக பராமரிக்கும்படி பஞ்சாயத்து தலைவர் கேட்டுகொண்டார்.
இத்திட்டம்
குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் மூ.பசுபதிராஜ் கூறியதாவது:-
இந்த நிதியாண்டில் கீழ் வாலாஜா வட்டாரத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சயத்துகளான
முகுந்தராயபுரம், மாந்தாங்கள், சுமைதாங்கி, பூண்டி, தகரகுப்பம், திருமளைச்சேரி, குடிமல்லூர்
உள்ளிட்ட 7 பஞ்சாயத்துகளில் இப்பழ தொகுப்பை பெறவிரும்புவர்கள் ரூ. 50 பங்களிப்பு
தொகையாக செலுத்தி அரசாங்கம் கொடுக்கும் ரூ.150 மானியத்தில் பலா, கொய்யா, எலுமிச்சை
நெல்லிமற்றும் சீத்தா உள்ளிட்ட பழமரகன்றுகள் பெற்றுகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட பயனாளிகள் தங்கள் ஆதார் கொண்டு உழவன் செயலியில்
முன்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம் .மேலும் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற www.tnhorticulture.tn.gov.in/kit new/இணையதளதில் பதிவு செய்ய
கேட்டுக்கொண்டார். தோட்டகலை உதவி அலுவலர்கள் சுந்தரி மற்றும் அன்பரசு
ஆகியவர்கள் நிகழ்ச்சினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!!
19.10.2023
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 41 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் குமார் (இணையவழி குற்றப்பிரிவு) ஆகியோர் உடன் இருந்தனர்.
==
ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஒரு லட்சம் மதிப்பில் சுமார்ட் வகுப்பறை
19.10.2023
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுமார்ட் வகுப்பறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

43 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்க உதவியாக இந்த வகுப்பறை அமையும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் உதவும். வேலூர் மாவட்டத்தில் நான் சுமார்ட் வகுப்பறை அமைத்து கொடுத்த 7வது அரசு பள்ளி இது.
இதனை குடியாத்தம் சப்-கலெக்டர் மதிப்பிற்குரிய வெங்கட்ராமன் அவர்கள் திறந்து வைத்தார். தனி வட்டாச்சியர் சந்தோஷ், ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், தலைமை ஆசிரியர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
-சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..
==
ராணிப்பேட்டையில் ஆட்சியர் பங்கேற்ற வளைகாப்பு விழா
19.10.2023
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி நேற்று (18.10.2023) திமிரி ஒன்றியம் K.B.J மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.

இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்திஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அசோக், புவனேஸ்வரிசத்தியநாதன், துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், பேரூராட்சித் தலைவர் மாலா
இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன் மற்றும் பலர் உள்ளனர்.
– சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்….
திமுக மாவட்ட பொறியாளர் அணி சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா
19.10.2023
ராணிபேட்டை மாவட்ட கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்களிடம் ராணிப்பேட்டைமாவட்ட திமுக மாவட்ட பொறியாளர் அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்N.K.சரவணன் அவர்கள்
வழங்கினார்.இதில் மாவட்ட பொறியாளர் அணி தலைவர்
K.காந்தி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்
திலிப்பன் சேகர் எஸ்.தினேஷ் வி.கார்த்தி ஜெ.நவின்ராஜ், மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாஸ் உடனிருந்தனர்.
-தகவல்: சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.