June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

செல்போனில் அபாய எச்சரிக்கை ஒலி- சோதனைக்காக…

1 min read

Alarm sound on cell phone- for testing…

20.10.2023
அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சோதனை தொடங்கியது.

பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ திட்டத்தின் சோதனை ஓட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.
‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க ”செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனையை தற்போது தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக ஏர்டெல் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கை ஒலியுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற பயனர்களுக்கும் விரைவில் இந்த அபாய எச்சரிக்கை அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.