ஆட்டோ ஓட்டுநர்களிடம் சாலை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு
1 min read
Awareness among auto drivers about road rules
21.10.2023
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, முத்துக்கடை ஆகிய பகுதிகளில் ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அன்பழகன் தலைமையில் ஆட்டோ சங்கத் தலைவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் போக்குவரத்து சாலை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாகனத்திற்கு அனைத்து விதமான ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றக்கூடாது என்றும், சாலை விதிகள் சரியாக
பின்பற்ற வேண்டும் என்றும், போக்குவரத்து வீதி மிறுபவர்கள் மீது விதிக்கப்படும் அபராத தொகை விவரங்கள் அடங்கிய நோட்டீஸ்
கொடுக்கப்பட்டு அவர்களிடம் அறிவுரைகள் வழங்கப்பட்டது
-செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்..