தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டது ஏன்? அண்ணமலை கேள்வி
1 min read
Celebrating the day of Tamil Nadu’s name change instead of the day it was formed.
1.11.2023
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தனது வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.
கலெக்டர் அலுவலகம் என்று கூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க.வினரை அடக்கி வைப்பதே, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேரூதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல.
நமது பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் நாமக்கல் மருத்துவக் கல்லூரியும் ஒன்று. 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,19,462 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, பிரதமரின் 5 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டம் 1,21,516 பேருக்கு, 85,505 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 3422 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். நலத்திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமரின் கரங்களை வலுப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.