திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை கண்காணிக்க 29 உயர் அதிகாரிகள்
1 min read
29 high officials to monitor the Gandashashti festival in Tiruchendur temple
8/11/2023
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்களின் வருகையை சீர்படுத்திடவும், தரிசன முறைகளை நெறிப்படுத்திடவும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிடவும் பணிகளை கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை சிறப்பு பணி அதிகாரிகளாக 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-
இணை ஆணையர்கள் தூத்துக்குடி அன்புமணி, திருநெல்வேலி கவிதா பிரியதர்ஷினி, மதுரை செல்லத்துரை, திருச்சி பிரகாஷ், தஞ்சை ஞானசேகரன், கடலூர் பரணீதரன், மதுரை கிருஷ்ணன், திருவேற்காடு அருணாசலம், ஸ்ரீரங்கம் மாரியப்பன், சுசீந்திரம் ரத்தினவேல் பாண்டியன், ராமேஸ்வரம் சிவராம் குமார், துணை ஆணையர்கள் திருநெல்வேலி ஜான்சிராணி, தூத்துக்குடி வெங்கடேசன் மயிலாடுதுறை ராமு, உதவி ஆணையர்கள் திருச்சி லட்சுமணன், நெல்லை கவிதா, திண்டுக்கல் சுரேஷ், நாகர் கோவில் தங்கம், தூத்துக்குடி சங்கர்.
சிவகங்கை செல்வராஜ், மதுரை வளர்மதி, தென்காசி கோமதி, குற்றாலம் கண்ணதாசன், மேல்மலையனூர் ஜீவானந்தம், சேலம் சரவணன், தான்தோன்றிமலை நந்தகுமார், தேக்கம்பட்டி கைலாசமூர்த்தி, மலைக்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம், மதுரை நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆய்வர்கள் மற்றும் செயல் அலுவலர்களாக பணிபுரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சிறப்பு பணி அலுவலர்கள் பணிக்கு வரும்போது உடன் வாக்கிடாக்கி கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.