கேராளவில் 148 ஷவர்மா ஓட்டல்களுக்கு சீல்
1 min read
148 shawarma restaurants in Kerala sealed
26.11.2023
கேரள மாநிலத்தில் சிக்கன் ஷவர்மா, குழி மந்தி பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இவை முறையாக பின் பற்றப்படுகின்றனவா என கேரள மாநில சுகாதார குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. நேற்று 88 குழுவினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத 148 ஷவர்மா கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.