June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இடைத்தரகர்கள் மூலம் மத்திய அரசின் புலனாய்வு மிரட்டல்: அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு

1 min read

Intimidation of central government investigation by middlemen: Appavu sensational allegation

2.12.2023
சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின. ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள்.3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்.

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.
என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன. பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது.
நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன்.

ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போடுகிறார்.

கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மதசார்புடைய நாடு இந்தியா என கவர்னர் பேசி வருகிறார்.
இவ்வாறு அப்பாவு கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.