தென்காசியில் “புதிய பென்சன் திட்டம் ஒழிப்பு” இயக்கம் சார்பில் பட்டினி போராட்டம்
1 min read
Hunger strike on behalf of CBS Abolition Movement in Tenkasi
3.12.2023
தென்காசியில் சிபிஎஸ்(புதிய பென்சன் திட்டம்) ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக புதிய பேருந்து நிலையம் முன்பாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட செயலாளருமான கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஊரகவளர்ச்சித்துறை தமிழ்பாண்டியன், பொது சுகாதாரத்துறை அசோக், வருவாய்த்துறை வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரோக்கியராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஜி.சுப்பிரமணியன் துவக்கவுரையாற்றினார். அரசு அலுவலர்கள் பார்த்தசாரதி, செய்யது இப்ராகீம் மூசா, ராம்பிரசாத், கோவில்பிச்சை, மாரியப்பன், மதிவாணன், சதீஸ்குமார், செல்வகுமார், கண்ணன், கணேசன், வீரபிரகாஸ், வைகுண்டசாமி, சாலமோன், சண்முகசுந்தரம், காளிராஜ், ஸ்டீபன் சேவியர் ஞானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் நிறைவுரை வழங்கினார். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் தங்கபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.