சென்னை: 40 அடி பள்ளத்தில் விழுந்த 2 பேரின் கதி என்ன? -மீட்பு பணி தீவிரம்
1 min read
Chennai: What is the fate of 2 people who fell into a 40 feet pit? -Recovery intensity
7.12.2023
சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை-வேளச்சேரி சாலை இணைப்பு சந்திப்பில் வாகனங்களுக்கான கியாஸ் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் அருகே 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக 40 அடியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து வெளியேறிய மழை நீர் அதிக அளவில் இறங்கியது.
இதில் கியாஸ் நிரப்பும் நிலைய கட்டிடமும் சாலையில் கட்டுமான சிவில் என்ஜினீயரிங் அமர்ந்து இருந்த கண்டெய்னர் பெட்டியும் 40 அடி பள்ளத்தில் சரிந்து விழுந்தன. இதில் ஜெயசீலன், நரேஷ் ஆகிய 2 வாலிபர்கள் 40 அடி பள்ளத்தில் விழுந்தனர்.
இவர்கள் விழுந்து 4 நாட்களாகும் நிலையில் அவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி 24 மணி நேரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதில் ஜெயசீலனுக்கு திருமணமாகி 9 மாதம் ஆகிறது. மனைவி மஞ்சு 4 மாத கர்ப்பமாக உள்ளார். அவர் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தில் கதறி அழுதுகொண்டிருக்கிறார். ராட்சத மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்த போதிலும் வெள்ள நீர் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் தண்ணீரை முழுமையாக வெளியேற்றுவதில் சிக்கல் நீடித்துகொண்டிருக்கிறது. பேரிடர் மீட்பு படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.