June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மிக்ஜாங் புயல் பாதிப்பை ராஜ்நாத் சிங் பார்வையிட்டு முதலமைச்சருடன் சந்திப்பு

1 min read

Rajnath visits the Mikjang cyclone and meets the Chief Minister

7.12.2023
சென்னையில் மிச்சாங் புயலால் பல பகுதிகள் பாதிக்ப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்னைக்கு இன்று வந்தார்.

இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கு அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதன்பிறகு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ளப்பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். பின்னர் ஐ.என்.எஸ். அடையாறில் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் இறங்கியதும் அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.


மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிச்சாங் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி மற்றும் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது.

பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து பிற்பகல் விமானம் மூலம் டெல்லி சென்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.