சங்கரன்கோவில் கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை
1 min read
Sankarankoil temple elephant medical examination
8.12.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி யானை உள்ளது. இந்த கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வனக் கால்நடை மருத்துவத்துறையுடன் இணைந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். பின்னர் மத்திய அரசின் கீழ் உள்ள வனவிலங்கு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக யானையின் ரத்தமாதிரி மற்றும் செல்களை எடுத்து பத்திரப்படுத்தினர். இதைத்தொடர்ந்து யானை நலமாக இருப்பதாக யானைப் பரிசோதனை செய்த வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் கூறினார்.
ஆய்வின் போது புளியங்குடி வனச்சரக வனவர் மகேந்திரன், உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவர் கருப்பையா, கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி மற்றும் யானைப் பாகன்கள் உடனிருந்தனர்.