குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
1 min read
Tourists flocked to the gushing water of Talal waterfalls
10.12.2023
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.
இன்று காலை முதலே அருவி கரைகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் சுற்றுலா பயணி களின் வருகை அதி கரித்ததன் காரணமாக அருவிக் கரைகளில் அமைந்துள்ள கடைகளில் பழங்கள் உணவுப் பொருட்களின் விற்பனை யானது அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.