தென்காசி நகராட்சி சார்பில் ரூ. 1 லட்சம் புயல் நிவாரண பொருட்கள்
1 min read
On behalf of Tenkasi Municipality Rs. 1 lakh distribution of storm relief items
11.12.2023
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்காசி நகர திமுக செயலாளர் நகரமன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் 1லட்சம் மதிப்பிலான பொருட்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்காசி நகர திமுக செயலாளர் நகரமன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் 1லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் நகர்மன்றத் தலைவரின் 1மாத ஊதியம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் பிஸ்கட் மேலும் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றை அனைத்து நகர்மன்றஉறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர் சார்பாகவும் நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கேஎன்எல். சுப்பையா
நகராட்சிஆணையாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகா, நகர திமுக துணைச் செயலாளர் ராம்துரை, நகர திமுக பொருளாளர் அ.ஷேக்பரீத்,
மாவட்ட பிரதிநிதிகள் மைதீன்பிச்சை, நா.பாலசுப்பிரமணியன்
மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுமான் சாதத் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் துரைசாமி, மற்றும் பணியாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்