தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி
1 min read
An old man tried to set himself on fire in front of Tenkasi District Collectorate
13.12.2023
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது நிலத்தை ஒருவர் அபகரித்து கொண்டதாக கூறி தனது உடலில் முதியவர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.இதை கலனித்த போலீசார் பாய்ந்து சென்று அதனை தடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 62), இவர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்று புகார் மனு ஒன்று அளிக்க வந்திருந்தார்.
முன்னதாக தான் பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறி தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீாசார் வலர்கள் பாய்ந்து சென்று செல்லப்பாவிடமிருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும், அந்த மனையில் சுமார் 1.5 சென்ட் அளவில் தற்போது வீடு கட்டி வசித்து வருவதாகவும், மீதமுள்ள 1.5 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அபகரித்து வேறு ஒரு நபரிடம் விற்பனை செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தான் இது போன்ற விபரீத முடிவு எடுக்க வேண்டிய சூழலில் உள்ளதாக கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார்.
உங்களது புகார் பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். அதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீஸ் அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
முதியவர் ஒருவர், தனது புகாருக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.