June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் இரத்ததான முகாம்

1 min read

Blood Donation Camp at Tenkasi Government District Hospital

13.12.2023
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யும், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கமும் இணைந்து இரத்ததான முகாம் மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின், இரத்ததான முகாமை துவக்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும், மறைந்த பொறியாளர் சங்க பொறுப்பாளர்களின் நினைவாக நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் தென்காசி மாவட்ட மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் குருதி கொடை வழங்கி் சிறப்பித்தனர்.

இந்த முகாமில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் செல்வபாலா, மற்றும் மூத்த மருத்துவர் ராஜேஷ் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருநெல்வேலி மண்டலதமிழ்நாடு மின்சார வாரியஅதிகாரி இசக்கி பாண்டி ஆலோசனையில் மின் பொறியாளர்கள்சங்கர பாண்டி,உசேன்ஆகியோரின் ஒருங்கினைப்பில் மின்வாரிய பணியாளர்கள் இரத்த தான முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா இரத்த வங்கி மருத்துவ குழுவினரையும் , மின்வாரிய பணியாளர் களையும் வெகுவாக பாராட்டினார்.
முடிவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் செல்வபாலா இரத்தவங்கி குழுவினருக்கும் இரத்ததானம் வழங்கிய அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.