ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
1 min read
The purchase price of milk has been increased by Rs.3 per litre
13.12.2023
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,
- ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது வருகிற 18-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38-ஆக உயர்வு.
- எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47-ஆக உயர்வு.
- கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.