மக்களவையில் ஜோதிமணி உள்பட 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
1 min read
5 MPs including Jyotimani suspended in Lok Sabha
14.12.2023
பாராளுமன்றம் மக்களவையில் நேற்று இருவர் வண்ண புகை குண்டுகளை வீசினர். இதனால் பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.