தென்காசியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
Postal workers protest in Denkasi
14.12.2023
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்து வரும்நிலையில் இன்று அதன் தொடர்ச்சியாக தென்காசி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12.12 .2023 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நாள் தென்காசி தலைமை அஞ்சலகம் முன்பு கோவில்பட்டி கோட்டம் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம்
கோவில்பட்டி கோட்டத்தின் தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பத்து அம்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சலக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்
கோட்டச் செயலாளர் பூ.ராஜா, ஹரி கார்த்திக், குலசேகரன் ,செந்தில்குமார், ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.