தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை
1 min read
Varuna Kalasa Pooja at Thoranamalai Murugan Temple
15.12.2023
தென்காசி அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் இன்று காலை வருண கலச பூஜை நடைபெற்றது.
தென்காசி-கடையம் – சாலையில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெறுவது வழக்கம். இம்மாத பூஜை இன்று (வெள்ளி) காலை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து
கிரகக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது.
முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி கடையம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து காலை, மதியம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.