ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min read
Chief Minister M.K.Stalin launched the relief scheme of Rs.6,000
17.12.2023
சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நாளை முதல் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க ரூ.1,455 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. நிவாரணத் தொகை சந்தேகங்களுக்கு 044-2859 2828, 1100 என்ற எண்களை அழைக்கலாம். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரியகருப்பன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6,000 உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு 100 சதவீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.