June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி, குமரியில் தொடர் கனமழை: அருவிகளில் குளிக்க தடை

1 min read

Continued heavy rains in Nellai, Tenkasi, Kumari: No bathing in waterfalls

17.12.2023
நெல்லை, தென்காசி, குமரியில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு, குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கோதையாறு, பரளியாறு, குழித்துறை உள்ளிட்ட ஆற்றங்கறையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்தது. காரணமாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை பெய்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.