மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது- மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min read
M.K. Stalin’s speech at the Christmas function
22.11.2023
சென்னை பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் இன்று மாலை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல். கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது. எந்த மதமும் வேறுபாடுகளை போதிப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மத ஒற்றுமை, நல்லிணக்கம் பிடிப்பதில்லை.
மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் இங்கு வேரூன்ற முடியாது. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் சென்றடைந்துள்ளது.நிவாரண பணிகளில் அரசுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும்.
மத்திய அரசு நிதி தராத சூழ்நிலையிலும், மாநில அரசு உடனடியாக நிதியை விடுவித்தது.இந்தியா கூட்டணி தான் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இந்த மாதிரி நேரத்திலும், மலிவான அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.