ரூ.1,933.69 கோடியில் கூட்டுக்குடிநீர்-பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
1 min read
1,933.69 Crore Joint Water-Underwater Sewerage Projects: Chief Minister Inaugurates
5.1.2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1,335 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 258 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவிலும் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 278 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 புதிய பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் 121 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கத்தை சார்ந்த இந்திரா நகர், மேக்ரோ மார்வெல், சஹாஜ் என்கிளேவ், சேதுலட்சுமி நகர், சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 3.33 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றும் வகையில் 22 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
மாதவரத்தை சார்ந்த லட்சுமிபுரம், மாதவரம் பூஸ்டர், மாதவரம் பேருந்து நிலையம், கூட்டுறவு நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 27 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் 44 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம்;
நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், கங்கையம்மன் கோயில் தெரு பகுதிக்கு நாளொன்றுக்கு 3.1 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் 26 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடைத் திட்டம்;
நெற்குன்றத்தை சேர்ந்த ஏ.வி.கே. நகர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நகர் பகுதிகளுக்கு 11 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்;
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட கண்ணன் காலனியில் நாளொன்றிற்கு 5 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றும் வகையில்,
10 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள 5 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீரகற்று நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள்;
அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் கழிவுநீர் உந்து நிலையம் முதல் வில்லிவாக்கம் தடாகம் கழிவுநீர் உந்துநிலையம் வரை உள்ள 300 மி.மீ. விட்டமுள்ள வார்ப்பிரும்பு உந்து குழாய்களை நாளொன்றுக்கு 3.50 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் 5 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் 450 மி.மீ. விட்டமுள்ள வார்ப்பிரும்பு கழிவுநீர் உந்துகுழாய்களாக விரிவாக்கம் செய்யும் பணி;
ராமாபுரத்தை சார்ந்த பாரதி சாலை, அம்மன் நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றிற்கு 10.35 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் 32 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாளச் சாக்கடை திட்டம்;
ராமாபுரத்தை சார்ந்த பணிமனை 154 மற்றும் 155 பகுதிகளுக்கு நாளொன்றிற்கு 26.58 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் 52 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கும் திட்டம் அடங்கும்.
ஆவடி, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி குதுப்பா பள்ளம் மற்றும் பாலக்கரை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காஞ்சிபுரம், கரூர், திண்டுக்கல், சேலம், ஓசூர், நாகர்கோயில், தாம்பரம் குரோம்பேட்டை மற்றும் சேலையூர், திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் 52 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 20 அறிவு சார் மையங்களும் திறக்கப்பட்டன.
ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சுமார் 33,760 மக்கள் பயன்பெறும் வகையில் 196 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் மற்றும் உத்தண்டி பகுதியில் சுமார் 9400 மக்கள் பயன்பெறும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள விரிவான பாதாள சாக்கடைத் திட்டம் என மொத்தம் 278 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.