நெல்லை- திருச்செந்தூர் இடையே நாளை முதல் வழக்கம் போல் ரெயில் இயங்கும்
1 min read
The train will run between Nellai and Tiruchendur as usual from tomorrow
6.1.2024
திருச்செந்தூர்-நெல்லை இடையே அமைந்துள்ள ரெயில் பாதை, கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ரெயில் சேவையை சீர் செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி -நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்கிறது. நாளை முதல் பயணிகள் ரெயில் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.