சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு -தென்காசியில் ஒளிபரப்பு
1 min read
CHENNAI GLOBAL INVESTORS’ CONFERENCE – Broadcast in Tenkasi
7.1.2024
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சி கானொளி மூலம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பபட்டது
2024-ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்தார். இம்மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஜனவரி 7-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடக்க விழா நிகழ்ச்சியினை காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுடன் பார்வையிட்டார்
ஒரு டிரில்லியன் டாலர் வணிகத்தினை தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் ஏற்படுத்தும் தொலைநோக்குப் பார்வையினை குறிக்கோளாகக் கொண்ட தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு தொழில் முனைவோர்களின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்காக நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கியத்துவத்தினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 7 அன்று சென்னையில் தொடங்கி வைக்கும் இம்மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியினை மாவட்ட அளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவகம், காமராசர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுரண்டை, ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரி, குற்றாலம் மற்றும் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி, ஆழ்வார்குறிச்சி மற்றும் பிற முக்கிய இடங்களிலும் இந்நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் இந்நிகழ்வினை காணொலி வாயிலாக கண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியினை அறிந்து கொண்டனர்.
மேலும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள இந்நிகழ்வானது https://ngim2024.com என்ற இணையதளம் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு பயனடையும்படி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன்,இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.கணேசன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்க தலைவர் சி.அன்பழகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இராமசுப்பிர மணியன் மற்றும் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.