குற்றாலம் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Election Awareness Program at Courtalam College
7.1.2023
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக கல்லூரி மாணவிகளால் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள், ஊமை நாடகங்கள், கவிதை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் சங்கரன்கோவில் தாமிரபரணி கலைக்குழுவினர் மு.சு மதியழகன் மற்றம் ம. மனோகர் ஆகியோரின் தேர்தல் மற்றும் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நையாண்டி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது,
இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது உரையில் நம் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு , தேர்தலைச் சந்திக்கும் இளம் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டும் , மாணவியர்கள் மட்டுமின்றி தங்களின் பெற்றோர்களையும் வாக்களிக்க அறிவுறுத்தவும் அறிவுரை வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் (பொறுப்பு), தென்காசி வருவாய் வட்டாட்சியர்(பொ) சண்முகம், கல்லூரி முதல்வர் முனைவர். ரா. ஜெய் நிலா சுந்தரி, தேர்தல் கல்வி அறிவு குழு வழிகாட்டும் அலுவலர் முனைவர் பாண்டிமாதேவி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், தேர்தல் தனித் துணை வட்டாட்சியர் கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.