June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி அருகே மின்சாரம் தாக்கி 2 விவசாயிகள் பலி

1 min read

2 farmers killed in electric shock near Buliangudi

9/1/2024
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள வௌ்ளானைக்கோட்டை
கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 74). அதே ஊரைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 64). இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு வெள்ளானைக்கோட்டை அருகே 10 ஏக்கர் நிலம் உள்ளது.

இதைப் பார்ப்பதற்காக விவசாயி சண்முகவேல் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை பார்க்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் வீட்டுக்கு வராததையடுத்து அவரது உறவினர்கள் குருசாமியிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து அவரைத் தேடி அந்த பகுதிக்கு குருசாமி சென்றுள்ளார். அங்கு அவர் குப்புற விழுந்து கிடந்ததைப் பார்த்ததும் அவரைத் தொட்டு எழுப்புவதற்கு குருசாமி முயற்சித்துள்ளார்.

அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை பக்கத்து வயலின் உரிமையாளரான குமார் என்பவர் வயலுக்கு சென்றார். அப்போது அங்கு அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி சண்முகவேலும், குருசாமியும் உயிரிழந்ததுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த புளியங்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 2 விவசாயிகள் இறந்த சம்பவம் வெள்ளானைக் கோட்டை கிராமத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.