அலங்காநல்லூர் அருகே 44.6 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்
1 min read
44.6 Crores is a huge Jallikattu ground near Alankanallur
9.10.2023
மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்விக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதலமைச்சர் சட்ட சபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ.6.6 லட்சம் கோடி தானா… தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை அட்வைஸ்
இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா அன்று மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக் கட்டுக்கு அடுத்த படியாக 4-வது ஜல்லிக்கட்டு போட் டியாக நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உலக தரத்தில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலேயே ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் கட்டப்பட்டுள்ளது. நமது தமிழ் நாட்டில்தான் கால்நடை மருந்தகம், காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடிவாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளது. தென்னக மக்கள் பாராட்டும் வகையில் இந்த மைதானம் திறப்பு விழா நடைபெறும். தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.