தென்காசி மாவட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கம்
1 min read
All government buses in Tenkasi district are in operation
9.1.2024
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 09.01.2014 போராட்டம் நடத்தி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டது.
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள்
15-வது ஊதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல், வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், வாரிசுக்கு வேலை, ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, புளியங்குடி உள்ளிட்ட 4 பணிமனைகளில் இருந்தும் சுமார் 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைத்து பணிமனைகளில் இருந்தும் காவல்துறை பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளா பகுதிக்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட 4 பணிமனைகளில் இருந்தும் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பணிமனைகளில் மொத்தம் 350 பேருந்துகள் உள்ளது.இதில் இன்று அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டது.
நேற்று இரவு முதல் நெல்லை மண்டல போக்குவரத்து துறை வணிகப்பிரிவு மேலாளர் சுப்பிரமணியன்
தென்காசி பணிமனை கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன்
தென்காசி பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி, மத்திய தொமுச தலைமை சங்க துணைச் செயலாளர் இக்னேஷியஸ், துணைச் செயலாளர் கருப்பையா,
தொமுச தலைவர் மணிகண்டன், பொருளாளர் ஜோசப் பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் குலசேகர செல்வன் சேர்மலிங்கம். மற்றும் அதிகாரிகள் தொமுச நிர்வாகிகள் அதிகாலை முதல் தென்காசி பணிமனையில் இருந்து அனைத்து பேருந்துகளையும் இயக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது பற்றி தென்காசியில் பயணிகள் கூறும் போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால் சிரமம் இன்றி செல்வதாக தெரிவித்தனர்…
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில்,ஆகிய போக்குவரத்து கழக பணிமனைகள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் பேருந்து நிறுத்தங்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.