இரண்டாம் உலகப் போர் கல்லறையில் ராகுல் காந்தி மரியாதை
1 min read
Rahul Gandhi Tribute at World War II Cemetery
16.1.2024
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நாகாலாந்து சிறிய மாநிலம் என சொல்லப்படுகிறது. ஆனால் மற்ற மாநில மக்களைப் போலவே உங்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.