June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

1 min read

Farmers Grievance Redressal Day meeting in Tenkasi- District Collector Announcement

19.1.2024
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் வரும் 24.01.2024 அன்று நடைபெறவுள்ளது

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.01.2024 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெறவுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளி டமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

இந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.