June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலைக்கு சென்று வந்த தந்தையை கொன்ற மகன்

1 min read

The son killed his father who had gone to Sabarimala

20.1.2024
சபரிமலைக்கு சென்று வந்த தந்தையை மது பாட்டிலால் குத்தி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டல் தொழிலாளி

திருவள்ளூர் தேரடி அருகே வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 45) ஓட்டல்களில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. வீட்டில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நவீன்குமார், லோகேசன் என்ற இரண்டு மகன்கள். இதில் நவீன்குமார் பட்டதாரி. லோகேசன் பத்தாவது வரை படித்துவிட்டு வேலை செய்து வருகிறார்.
வெங்கடேசனுக்கு குடிபழக்கம் உண்டு. அவர் மது போதைக்கு அடிமையாகி ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைப்பார்.
இந்நிலையில் வெங்கடேசன் சபரிமலை ஜயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று இன்று காலை வீட்டிற்கு வந்து நிலையில். மாலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மகன் நவீன் குமார் தனது தாயுடன் தகராறு ஈடுபட்டு தாக்கியதை கண்டித்தார். மேலும் ஆத்திரமடைந்து தந்தை மது அருந்திவிட்டு வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து கழுத்தில் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வெங்கடேசனின் மூத்த மகன் நவீன் குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தாயின் மீது சந்தேகப்பட்டு குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சபரிமலைக்கு சென்று இன்று காலை வீடு திரும்பிய தந்தையை மது பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்த மகன் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

-ஜெயஸ்ரீ, திருவள்ளூர் செய்தியாளர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.