நெற்கட்டும் செவலில் வெண்ணிகாலாடி உருவ சிலை அடிக்கல் நாட்டு விழா
1 min read
Foundation stone ceremony of Vennikaladi statue in Nelkatut Cheval
23.1.2024
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக் காலாடியின்உருவச் சிலை அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டம், நெற்கட்டும் செவலில் ரூ.50 இலட்சம் மதிப்பிலான சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிகாலாடியின் உருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து நெற்கட்டும் செவலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.