June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

1 min read

Free eye checkup camp at Red Fort

23.1.2024

தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம், சுபம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளா்கள் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவுமனையும் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த முகாமிற்கு சுபம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளா்கள் சங்க மாவட்ட தலைவா் மணி மகேஸ்வரன் தலைமை தாங்கினார். செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் ராஜேஷ் கண்ணன், முன்னாள் வட்டார வேளாண் அலுவலா் ஷேக்முகைதீன், ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன், தாயின் மடியில் அறக்கட்டளை நிறுவனா் கோமதி நாயகம் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து திருக்குற்றாலம் விவேகானந்தா ஆஸ்ரம நிறுவனத்தலைவா் சுவாமி அகிலானந்த மகராஜ் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள், மற்றும் குழுவினா் சிகிச்சை அளித்தனா். முகாமில் மொத்தம் 215 பேர் கலந்து கொண்டனா். அதில் 52 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். 21 நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 42 நபர்களுக்கு மருந்து மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கண்புரை நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளை முகாம் தினத்தன்றே திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்ட நபர்களுக்கு உள்விழி (ஐஓஎல்) லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்தர தொண்டர்கள், கேந்திர ஆசிரியர்கள் வேணி, மஞ்சு, தொண்டா்கள் சுரேஷ், ஐயப்பன், மாரிச்செல்வம், லெட்சுமணன் கேந்திர தன்னார்வலா்கள், சமூக ஆர்வலா்கள் சுபம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளா்கள் சங்க நிர்வாகிகள் துரை ராமச்சந்திரன், சுப்பிரமணி, கோபக்குமார், ராமு, மாரியப்பன், முத்து மாரியப்பன், சிவக்குமார், மாரிமுத்து, குருவாயூர் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் விவேகானந்தா கேந்திர தொண்டா்கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.