தென்காசி மாவட்ட ஊராட்சிகள் கூட்டமைப்பு ஊராட்சி இயக்குனரிடம் கோரிக்கை
1 min read
Request to Panchayat Director of Federation of Tenkasi District Panchayats
1.2.2024
தென்காசி மாவட்ட ஊராட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன் ஊராட்சி இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னை பனகல் மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் பொன்னை யாவை தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் டி கே பாண்டியன் சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு முதலில் நாங்கள் வேண்டுகோள் விடுத்த 11 அம்ச கோரிக்கையும் மற்றும் இப்போது நாங்கள் அளித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தர அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் தமிழக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் இரண்டு கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்த பணம் முழுமையான வேலைக்கு இன்னும் 60 லட்ச ரூபாய் அதிகமாக ஒதுக்கினால் விரைவில் வேலை ஆரம்பிக்க இருக்கிறார்கள் ஆகவே விரைவில் பொது நிதியிலிருந்து அந்த சாலை அமைக்க பரிந்துரை செய்து விரைவில் வேலை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஒன்னாவது கணக்கில் பணம் இல்லாத ஊராட்சிக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் மற்றும் இரண்டாவது அக்கவுண்டில் உள்ள உபரி நிதியை ஒன்னாவது அக்கவுண்டுக்கு அத்தியாவசிய வேலைகளுக்கு மாற்றவும் அதற்கு அதிகமான உள்ள இரண்டாவது அக்கவுண்ட் உள்ள நிதியை அவசர வேலைகளுக்கு உடனடியாக வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவாதித்தார்கள். இயக்குனர் பொன்னையா விரைவில் ஆணை பிறப்பிக்க உத்தரவு வழங்கினார். அவருக்கு 221 ஊராட்சி மன்றங்களின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.