தென்காசி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min read
Poultry Prevention Camp in Tenkasi District- District Collector Information
4.2.2024
தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுபற்றி தென்காசி
மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே. கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
மகிழ் முதலமைச்சரின் உத்தரவு படி தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 01 முதல் 14 முடிய இரண்டு வாரங்கள் கோழிக்கழிச்சல் தடுப்பூசிமுகாம் நடத்தப்படுகிறது.
கோழிக்கழிச்சல் நோய் என்பது கோழிகளை தாக்கும் ஒருவிதமான வைரஸ் நோய் இந்நோய் கண்ட. கோழிகள் இறப்பு நேரிடலாம். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை தடுப்பூசி போடுவதன் மூலம் தான் இந்தநோயை தடுக்க இயலும், இந்த தடுப்பூசி அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களில் வாராவாரம் இடப்படுகிறது.
வருடம் ஒருமுறை சிறப்பு முகாமாக இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களில் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமினை நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இட்டு கோழிக்கழிச்சல் நோயிலிருந்து தங்கள் கோழிகளை காப்பாற்றி பொருளாதார முன்னேற்றம் அடையலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.