June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஸ்கேட்டிங் மூலம் 12 கி.மீ. கடந்து 4 வயது சிறுவன் சாதனை

1 min read

12 km by skating in Tenkasi. A new record for a 4-year-old boy who passed

5.2.2024
தென்காசியில் 04 வயது சிறுவன் 12 கி.மீ. தொலைவை தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடநது புதிய சாதனை படைத்துள்ளார்.

தென்காசியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், தென்காசி ஏ.எஸ்.ஏ வித்யா நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து 4 வயது மாணவர் மகாதேவ் யாதவின் 12 கி.மீ. தொலைவுக்கு தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மேற்கொள்ளும் புதிய சாதனை முயற்சியை சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தென்காசியை சேர்ந்த கார்த்திக்-கார்த்திகா தம்ப தியரின் 4 வயது மகன் மகா தேவ் யாதவ். இவர் 12 கி.மீ தொலைவிற்கு தொடர்ச் சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புதிய உலக சாதனை முயற்சிக்காக

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் இருந்து கணக்கப்பிள்ளை வலசை வழியாக பண்பொழி வரை சென்று மீண்டும் பண்பொழியில் இருந்து மீண்டும் குத்துக்கல்வல சையில் இருந்து புறப்பட்டு கணக்கப்பிள்ளை வலசை யில் 12 கி.மீ தொலைவை 42 நிமிடம் 44 நொடிகளில் நிறைவடைந்தார்.

முன்னதாக புதிய சாதனை முயற்சியை சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். சுவாமி விவேகானந்தா, யோகா மற் றும் ஸ்கேட்டிங் கழக நிறு வனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஎஸ்ஏ வித்யா நிகேதன் பள்ளியின் நிர்வாக அதிகாரி சுதா அனைவரையும் வரவேற்று பேசினார் .

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் டாக்டர் எம்.புதியபாஸ்கர்,ஏஸ்ஏ பள்ளியின் தாளாளர் கல்யாணி, நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன், இலத்தூர் உதவி ஆய்வாளர் தாமரைவிங்கம், குங்பூ பயிற்சியாளர், ராம் ராஜ்,. ரங்கநாதன், கவுன்சிலர் சுனிதா ஆகியோர சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முடிவில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்யராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஏற்கனேவே சங்கரன் கோவிலைச் சேர்ந்த அஜய் என்ற 4 வயது சிறுவன் 7 கிமீ தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்து சாதனை படைத்துள்னார். அதனை மகாதேவ் யாதவ் முறியடித்து 12 கிமீ தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஸ்கேட்டிங் மூலம் புதிய சாதனை படைத்துள்ள மாணவர் மகாதேவ் யாதவை சிறப்பு விருந்தினர்கள் தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் சேர்மன் டாக்டர் எம்.புதிய பாஸ்கர்,எஏஸ்ஏ பள்ளியின் தாளாளர் கல்யாணி, நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன், இலத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமரை லிங்கம், குங்பூ பயிற்சியாளர், ராம் ராஜ்,. ரங்கநாதன், கவுன் சிலர் சுனிதா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்யராஜ், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.