June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே குல்பிஐஸ் வியாபாரி கடத்திய 2 பேர் கைது

1 min read

2 persons arrested near Tenkasi for abducting Gulpis seller

9.2.2024
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் குல்பி ஐஸ் விற்பனை செய்த நபரை பைக்கில் கடத்தி சென்று பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை கொம்பு மாடசாமி கோவில் தெருவில் வசித்து வரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவர் அப்பகுதியில் 15 ஆண்டுகளாக மிதிவண்டியில் குல்பி ஐஸ் விற்பனை செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சுனில் சுந்தரபாண்டியபுரம் பெரிய குளத்தின் வடபுறம் உள்ள முப்புளி மாடசாமி கோவில் அருகே நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் அவரிடம் குல்பி ஐஸ் வாங்கியுள்ளனர், வாங்கிய ஐஸுக்கு பணம் கேட்டபோது எங்கள் ஊருக்கு வந்து என்னிடமே பணம் கேட்கிறாயா என்று சுனிலை தாக்கி அவர்களின் இருசக்கர வாகனத்தில் அவரை கடத்தி சென்று அவர் வைத்திருந்த தொலைபேசி மற்றும் ரூபாய் 2200/- பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுனில் சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சாம்பவர் வடகரை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்குட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.