June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி

1 min read

Helmet wearing awareness rally in Tenkasi

13.2.2024
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இருசக்க வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு மாத விழாவின் தொடர் நிகழ்ச்சியாக நேற்று தென்காசியில் இருசக்க வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு தென்காசி குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள தென்காசி வட்டார போக்குவரத்து
அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலை வழியாக தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியை தென்காசி வட்டார, போக்குவரத்து அலுவலக அலுவலர் கண்ணன் தலைமை ஏற்று கொடி அதைத்து பேரணியை தொடங்கி வைத்தார். தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி முன்னிலை வகித்தார், மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினர்.

இந்த விழிப்புணர்வு பேரணி யில் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் ஊழியர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பளர் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.