June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் பேரணிக்கு குவிந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

1 min read

Tear gas fired at farmers gathered for a rally in Delhi

13.2.2023
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் டெல்லி சாலைகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர்.
ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதட்டமாக இருந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.