தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Tenkasi District People’s Grievance Redressal Day Meeting
13.2.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் பார்வையற்ற 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 10.203/ மதிப்பில் மொத்தம் ரூ.30,879, மதிப்பிலான எழுத்துக்களை பெரிதாக்கிக் காட்டும் உருப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுய உதவிக்குழுவினரின் பன்முக கலாச்சாரப் போட்டிகளான கயிறு இழுத்தல் கபடி கோலப்போட்டி குழுப்பாடல் குழு நாடகம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு சான்றிகழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ழங்கினார்கள்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 547 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உ ள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குருவம்மாள். செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.