கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- தென்காசி கலெக்டர் தகவல்
1 min read
Scholarship for College Students- Tenkasi Collector Info
22.2.2024
தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ மாணவியர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ ஃ மாணவியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்குமிகாமல் இருத்தல் வேண்டும்.
நடப்பாண்டில் புதிய மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login – இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal)
புதியதிற்கு (Fresh) 01.02.2024 முதல் செயல்பட்டு வருகிறது. புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்கள் 29.02.2024 – க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு உங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம்.,