June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டைஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் சிலை

1 min read

Thiruvalluvar statue at Sengottaiarasu Boys High School

24/2/2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியின் நுாற்றாண்டு விழா மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது.

இந்த விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவகர்லால்நேரு தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அலுவலா் முத்தையா, மாவட்டக் கல்வி அலுவலா் தேவிகாராணி, பள்ளி தலைமைஆசிரியா் சுந்தரக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளா் கோ.இராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி பாராளுமன்ற உறுப்பினா் தனுஷ்.எம்.குமார் கலந்து கொண்டு பள்ளியின் முகப்பில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் முழுஉருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னா் முழு உருவ சிலையை அன்பளிப்பாக வழங்கிய சங்கர்ரவி, திருமலைக்குமார் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர திமுக செயலாளரும் வழக்கறிஞர் சங்கத்தலைவருமான வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன்,
முன்னாள் செங்கோட்டை நகர்மன்ற தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான செங்கோட்டை எஸ்எம்.ரஹீம், உதவி தலைமை ஆசிரியா்கள் ஜோதி லெட்சுமி, சிவசுப்பிரமணியன், சுடர்மணி, பெற்றோர் ஆசிரியா் சங்க பொருளாளா் கணேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் விஜயலெட்சுமி, முன்னாள் மாணவர்கள் சங்க துணைத்தலைவா் பண்டாரம், ஆலோசகர் துரைராஜ், பள்ளி ஆசிரியா் சுதாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நிகழச்சியில் நகர்மன்ற உறுப்பினா் இசக்கிதுரை பாண்டியன், சமூக ஆர்வலர்கள் ஆறுமுகச்சாமி, சண்முகராஜா,காளி பீர்முகம்மது, சேத்மதார் இப்ராகிம் விஜி ஜெயேந்திரா பள்ளி தாளாளா் ராம்மோகன், தமிழ்நாடு மின்சாரவாரிய உதவிப்பொறியாளா் சண்முகவேல், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் சுடலை மற்றும் பெற்றோர், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளா் ஆறுமுகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.