June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் வெல்டிங் பட்டறை அதிபர் வெட்டிக் கொலை – 2 பேர் கைது

1 min read

Welding workshop principal hacked to death in Tenkasi – 2 arrested

24/2/2024-
தென்காசியில் நேற்று இரவு
வெல்டிங் பட்டறை அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு தபர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி நகராட்சி எல்.ஆர். சாமி நாயுடு பாளையம் தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் விக்னேஷ் என்ற வினோத்குமார் (வயது 27). இவர் அந்த பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெல்டிங் பட்டறையை அடைத்து விட்டு வினோத்குமார் எல் ஆர் எஸ் பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது ரயில்வே பீடர் ரோடு சந்திப்பு பகுதியில் அவர் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த இரண்டு பேர் திடீரென வினோத்குமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வினோத் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் படுகாயம் அடைந்த வினோத்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் காசி விஸ்வநாதன்( வயது 27), மலையான் தெரு அருள்ராஜ் என்பவரது மகன் இசக்கிராஜா (வயது 26) ஆகிய இருவரும் வினோத்குமாரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.தென்காசியில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.