June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன் நினைவு நாள் அஞ்சலி

1 min read

Pattiveeranpatti Soundara Pandian Memorial Day Tribute

25.2.2024
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன் நாடார் 71 வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி குத்துக்கல் வலசையில் உள்ள இந்து நாடார் வாலிபர் சங்கத்தின் கட்டிடத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கலந்து கொண்டு பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன் நாடார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அவர் பேசும்போது பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள் பத்து ஆண்டுகள் நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய தலைவராக இருந்து சமுதாயப் பணியை திறம்பட செய்தவர் 1970 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் நாடார் சமுதாயத்தின் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நாடார் சமுதாயத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் சுயமரியாதை கொள்கையால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை திருமணங்களை அதிகமாக நடத்தியவர் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்து முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்தியவர் பெரியாரை அனைவரும் போற்றுகின்ற வகையில் பெரியாருக்கு புகழை தேடி கொடுத்தவர்
திராவிட கட்சிகள் வளர்ப்பதற்கு அதிகமாக நிதி உதவி செய்தவர் டாக்டர் அம்பேத்கரை முதன் முதலில் தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயத் தினருக்காகவும் போராடியவர் நாடார் சமுதாயத்திற்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை என்று பேசினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து நாடார் வாலிபர் சங்கம் துனை தலைவர் ராம்குமார் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் பொருளாளர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் தவசிமுத்து அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.