தென்காசியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
People’s Grievance Day meeting led by Collector in Tenkasi
5.3.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து 714 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி கள் குழந்தைகளை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவியல் மையத்திற்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனுப்பி வைத்தார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 714 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்கள் மூலமாக பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர் களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர்(கலால்) நடராஜன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் ரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளின் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.