சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவர் திடீர் மரணம்- உறவினர்கள் சாலைமறியல்
1 min read
Sudden death of van driver at Sankarankovil police station- Relatives block road
9.3.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வேன் டிரைவர் முருகனை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நிலையில் வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்நிலையத்தில் திடீர் மரணம் அடைந்த வேன் டிரைவரை போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததக கூறி இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 35) இவர் வேன் ஓட்டுனராக இருந்து வருகிறார்.நேற்று மகா சிவாரத்திரியை முன்னிட்டு வாடகை வேனில் பக்தர்களை ஏற்றி கொண்டு சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள ஐம்பூத தலங்களுக்கு செல்வதற்காக சங்கரன்கோவில் நகர் பகுதியில் வேனை ஒட்டி வந்துள்ளர்..
இதில் ஒட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததால் சாலையில் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய சாலையில் வேனால் விபத்து ஏற்பட்டதால் காவல்துறையினர் வேனையும், முருகனையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்…
அப்போது முருகன் திடீரென மயக்கம் அடைந்துள்ளார்
உடனடியாக காவல்துறையினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியதால் வேனை ஓட்டி வந்த மற்றொரு நபர் வேனை காவல்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்று விட்டார்..
இதனையறிந்த முருகனின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று இரவு எட்டு மணியில் இருந்து காவல்நிலையம் முன்பு முருகனை காவல்துறை யினர் தான் அடித்து கொன்று விட்டதாகவும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக முருகனின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…
இது பற்றி தகவல் அறிந்த நெல்லை எஸ்பி. சிலம்பரசன், தென்காசி எஸ்பி.சுரேஷ்குமார் சங்கரன்கோவிலுக்கு விரைந்து சென்றனர்
அப்போது போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் .
அதில் உடன்பாடு எட்டப்படாததால் அருகில் உள்ள இராஜாபளையம் செல்லும் சாலையில் அமர்ந்து ஒரு பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தென்காசி எஸ்பி சுரேஷ்குமார், நெல்லை எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் பொது மக்களிடம் மீண்டும் பேச்சுவர்த்தை நடத்தினார்கள் அப்போது கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது வேன் டிரைவர் முருகன் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதன் பின் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் அதனை ஏற்றுக் கொண்ட வேன் டிரைவரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வேன் டிரைவர் முருகனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக நெலை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் பாதுகாப்போடு கொண்டு சென்றனர்.. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.