June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக முத்தமிழ் விழா

1 min read

Finally, Thiruvalluvar Kazhagam Muthamil Festival

10.3.2024
கடையம் திருவள்ளுவர் கழக நிறுவனர் பேராசிரியர் அமரர் அறிவரசன்(குமாரசாமி) அவர்களின் தமிழ் பேராற்றலைப் போற்றும் வகையில் முத்தமிழ் விழா கடையம் திருவள்ளுவர் கழகத்தினரால் இன்று(10-ந் தேதி) நடத்தப்பட்டது. கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் (நூல் நிலையம்) அரங்கத்தில் நடந்த இந்த விழாவில் திருவள்ளுவர் கழக செயலாளர் கல்யாணி சிவகாமி நாதன் வரவேற்றார். அன்னசரஸ்வதி ஒரு குறள் சிந்தனை வழங்கினார். விழாத்தலைவர் ஆ.சேதுராமலிங்கம், பேராசிரியர் அறிவரசனை நினைவுகூர்ந்து கவிதை வாசித்து உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி செயலாளர் முனைவர் மு.சுந்தரம் கலந்து கொண்டு பேராசியரின் முத்தமிழ் பேராற்றலைப் போற்றிச் சிறப்புரை ஆற்றினார்.
பரமகல்யாணி மேல்நிலைபள்ளி இசை ஆசியர் மைதிலி அவர்களின் மாணவிகள் பங்கேற்ற இசைபாடல் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி கலை வளர்மணி புருசோத்தமன் அவர்களின் சித்திரை சபை நாட்டியாஞ்சலி -கோவிந்தபேரி கலைமகள் கல்வி மைய மாணவியரின் குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம் நடைபெற்றது.
விழாவில் இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
திருவள்ளுவர் கழக உறுப்பினர் பணி நிறைவு மாவட்ட கல்வி அலுவலர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

விழாவில் தென்காசி திருவள்ளுவர் கழக செயலாளர் சீத்தாரப்பன், பொருளாளர் சந்திரசேகரன், உறுப்பினர் கிருஷ்ணன், கடையம் திருவள்ளுவர் கழக இணைச் செயலாளர் கோபால், பொறுப்பாளர் சின்னச்சாமி, நூலகர் மீனாட்சி சுந்தரம், சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான், இன்பசேகரன், கவியரசன், பத்மகுமார், ஆறுமுகம், பணி நிறைவு தலைமை ஆசிரியர் முருகன், கணபதி, அமர்சேவா சங்க தலைமை நிர்வாக அலுவலர் கே.எம்.சண்முகம் மற்றும் பெண்களும் மாணவியரும் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.